முகலாய பெயர்களில் உள்ள இடங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் முகலாய பெயர்களில் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என மேற்கு வங்காள பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி இது குறித்து கூறுகையில் முகலாயர்கள், இந்து மதத்தினர் நிறைய பேரைக் கொன்று இந்து மத வழிபாட்டு தலங்களை அளித்துள்ளனர். முகலாயர்கள் பெயரில் உள்ள இடங்களை கண்டறிந்து பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்திற்குள் பிரிட்டிஷ்காரர்கள், முகலாயர்கள் பெயர்களில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.