உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக வந்த லாரி எதிர்பாராத வகையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதோடு 15க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.