பெற்றோர்கள் கடைக்கு செல்லும்போது குழந்தைகளை அழைத்து செல்ல மாட்டார்கள் ஏன் தெரியுமா அவர்கள் பார்ப்பதையெல்லாம் வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பர். நாம் நினைக்கும் பொருளை வாங்குவதற்காக குழந்தைகள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அடம்பிடிக்க தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் மார்க்கெட்டில் குழந்தை ஏதோ ஒன்றைப் பார்த்து அது வேண்டுமென அடம் பிடிக்க  தொடங்கியுள்ளது. இதற்கு அவருடைய அம்மா மறுத்த நிலையில் குழந்தை தரையில் படுத்து கொள்கிறது.

இதனால் அம்மா தன்னுடைய கணவரை குழந்தையின் பக்கத்தில் தரையில் சென்று படுக்குமாறு கூறுகிறார். இந்நிலையில் கணவரும் குழந்தையின் பக்கத்தில் படுத்து கொள்கிறார். இதனையடுத்து அம்மா கணவரின் கன்னத்தில் பளாரென  அடித்துள்ளார். இதனை பார்த்த குழந்தை எழும்பி அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு செல்கிறது. இந்த காட்சியை பார்க்கும் போது குழந்தையை எழுப்ப அம்மா பயன்படுத்தும் யோசனை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் குழந்தையை எழுப்ப அம்மாவின் யோசனை வீக்கத்தக்கது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.