விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி லலித்குமார் 62 ஆயிரத்து 55 ரூபாயை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. அந்த நபரும் பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லலித்குமார் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.