டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பில்கேட்சை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். சிறந்த மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதற்கான அவரது கொள்கை தெளிவாகத் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ் சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்திய அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட தனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.