ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது கருத்தை தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் பேசியதாவது,

வெள்ள பாதிப்பின் போது ஒரு முறையாவது மோடி தமிழ்நாட்டின் பக்கம் எட்டி பார்த்திருக்கிறாரா? ஒருமுறை கூட வரல. ஆனால்  இப்போது  தமிழ்நாட்டையே சுற்றி… சுற்றி வருகிறார்.  அடுத்த வாரம் கூட வருகிறார். ஏனென்றால்  ஓட்டு கேட்பதற்காக.  அவருக்கு நீங்க யாரும்  ஓட்டு போட மாட்டீங்க னு தெரியல போல. பாவம் யாரோ அவர் கிட்ட சொல்லிருக்காங்க நீங்க இங்க வந்த ஓட்டு நிறைய வாங்கிடலாம் அப்படினு. ஆனால் அப்படியல்ல.  தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.