கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் உழைப்பாளிகள் அதிகம் உள்ளனர். நாங்கள் உழைப்பையும் மக்களையும் நம்பியே இருக்கின்றோம். முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்தால் கூட உங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.