செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க.

அதாவது கொஞ்ச நஞ்சம் இல்ல,  திமுக வந்து ஒரு ஊழல் கட்சி. திமுக வந்து ஒரு அதிகார துஷ்பிரயோகம் செய்து…  கோடிக்கணக்காக கொள்ளை அடித்தது. இது போன்றதெல்லாம் இன்னைக்கு வந்து பிரதமர் பார்லிமெண்டில் பேசி இருக்காரு. தமிழ்நாடு அளவுல இருந்த உலகப் புகழ் பெற்ற ஊழல் அரசு…  இன்றைக்கு இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது.

ஏற்கனவே ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ஸ்வாகா பண்ணி,  ஒரு தமிழன் உடைய தலைக்குனிவை ஏற்படுத்தியது திமுக அரசு என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அந்த வகையில் வந்து பார்லிமெண்ட்ல பிரைம் மினிஸ்டர்…  அதாவது பாரத பிரதமர் பொருத்தவரையில், இன்றைக்கு அது கிழி கிழின்னு கிழிச்சி தொங்கவிட்டு இருக்காரு திமுகவை. அந்த வகையில்  எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி என தெரிவித்தார்.