நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் 2023-ம் ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால், இறைச்சி விற்பனை செய்பவர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடு இறைச்சிகளையே சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது மிருக வதைத்தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.