தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பலம் நம்ம பக்கம் இருக்கு. நேரேட்டிவ்  நம்ம பக்கம் இருக்கு.  தமிழக மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. மோடி அவர்களின் பக்கம் இருக்கிறார்கள். நாம கிளரிபை பண்ண வேண்டிய அவசியம் கிடையாது.  இந்த வீட்டுக்கு இன்னும் சில பேர் குடிபெயர வருவாங்க. வெளியே இருந்து வீட்டை பார்த்துட்டு இருப்பாங்க.

வீடு நல்லா இருக்குமா ? வீடு உள்ள போலாமா ? இந்த வீட்டுக்கு போனா நம்மளை மரியாதையா வச்சிருப்பாங்களா? நம்மையும் இந்த வீட்டினுடைய அங்கத்தினரா வச்சிருப்பாங்களா ? வருவாங்க. வீடு என்றால் விருந்தினர்கள் வரத்தான் செய்வாங்க. நாம கேட் எல்லாம் போடலைங்க. மெயின் கேட் திறந்து வைத்திருக்கிறோம். கதவை திறந்து வைத்திருக்கின்றோம், ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம். நாம் தயாராக இருக்கின்றோம்.

மோடி அவர்களை ஏற்றுக் கொண்டு எங்களுடைய வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க. நம் மோடி அவர்களை பிரதமர் ஆக்குவோம். மக்களுக்கு தெரியும் ஐயா. பிரதமர் என்றால், ஒரு தகுதி. எங்க தலைவர் பிரதமர் என்று சொன்னால், ஏற்கனவே சொல்லிருக்கின்றேன்…. சிரிச்சிட்டே போயிருவாங்க…. அதுக்கு நீங்க பதில் சொல்லி, எங்க தலைவருக்கு, உங்க தலைவர் போட்டியா ? என சொல்லிட்டு இருக்க கூடாது.

அது நமக்கு தேவையில்லை. பத்தாண்டுகளாக உலக நாடுகள் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று ஒரு தலைவர் அற்புதமான தலைவர் மோடி அவர்கள் இருக்கும்  போது நீங்க யாரு கிட்டயும் போய் கம்ப்ளீட் பண்ணி சண்டை போட வேண்டிய அவசியம் கிடையாது.  மக்கள் அனைவருக்கும் மோடியை பற்றி தெரியும்….யாரோ ஒருத்தர் இல்ல.  நாங்க எங்க கட்சியும் பிரதமர் மந்திரி வேட்பாளர் இருக்காங்கன்னா….சிரிச்சிக்கோங்க, அவ்வளவு தான் என தெரிவித்தார்.