கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராமமூர்த்தி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று மது குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இந்திராவதி மது குடித்துவிட்டு எதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தீர்கள்? பேருந்தில் வர வேண்டியதுதானே? என கேட்டு தனது கணவரை திட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் மன உளைச்சலில் இருந்த ராமமூர்த்தி தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.