லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் DA உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அரசு சார்பில் இந்த அறிவிப்பு வந்தால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி(DA) தற்போதைய 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும். இப்போது 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 38 சதவீதம் DA பெறுகின்றனர்.