சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர், ஸ்கூட்டி போன்றவை அடங்கும்.

ஹரேந்திரா, ராமேஷ்வர், ராஜேந்திரா ஆகிய 3 பேர் தான் தன் மருமகளின் திருமணத்திற்காக ரூபாய்.3.21 கோடியை வாரி வழங்கியுள்ளனர். இவ்வாறு தங்கை மகளின் திருமணத்திற்கு ராஜஸ்தான் சகோதரர்கள் கொடுத்த வரதட்சனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.