மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க நவீன் நந்தா முடிவு செய்துள்ளார். அந்த வகையில் தனது மருமகளுக்கு நவீன் நந்தா மறுமணம் செய்து வைத்துள்ளார். எங்களது வீட்டிற்கு மருமகளாக வந்து, இப்போது மகளாக போகிறார் என நவீன் நந்தா டுவிட் செய்துள்ளார்.