கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்பட மொத்தம் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி பாக்கி இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வரி பாக்கி உள்ள திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனாலும் பலர் வரிபாக்கியை செலுத்தாததால் கடந்த 1- ஆம் தேதி கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோடு பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் அதிகாரிகள் ஜப்தி நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

அதில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் சொத்து வரி, தொழில்வரி செலுத்தப்படவில்லை. நிலுவைத் தொகையை வருகிற 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் கூறியபடி நிலுவை தொகையான 3 லட்சத்து 21 ஆயிரத்து 608 ரூபாயை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.