கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மஞ்சுநாதா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் இருக்கும் மரத்தில் மஞ்சுநாதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மஞ்சுநாதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மஞ்சுநாதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.