நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் வெளியிட்டுக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. 

லைக்கா நிறுவனத்திற்கு விஷால் செலுத்த வேண்டிய தொகை விவகாரத்தில் தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.நடிகர் விஷால் உயர் நீதிமன்ற ஆணையை  செயல்படுத்தவில்லை என லைக்கா தரப்பு வழக்கு தொடர்ந்தது.உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் விஷால் செப்டம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் நேரில் ஆஜரான விஷாலை நீதிபதி கடுமையாக அறிவுரை வழங்கினார். லைக்கா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய 21.29 கோடியில் 15 கோடியை கோர்ட்டில் செலுத்துவைத்து குறித்தும் விஷாலிடம் உறுதியை பெற்ற நீதிமன்றம் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்துக்கான தடையை நிறுத்தி வைத்துள்ளது.