திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெயில் வாட்டி வதைத்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.