மதுரை கீரனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா ? என ஆட்சியர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கை முடித்து வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மூன்று மாதத்திற்குள் ஆய்வு செய்து,  முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.