இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், நிமோனியா போன்றவை தாக்கக்கூடும். இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும்,  விழிப்புடனும் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசால் 4 நாட்களுக்கு குறையாமல் காய்ச்சல் வாட்டி விடுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, இந்த வைரசும் கொரோனாவை போலவே பரவுகிறது. எனவே கைகளை சோப்பு போட்டு கழுவுவது, மாஸ்க் அணிதல், முகத்தை தொடாமல் இருத்தல் ஆகியவற்றை செய்தாலே வைரஸ் பரவாது என்று அவர் தெரிவித்துள்ளார்.