கடந்த 2014-ம் வருடம் பொறியாளன் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி. இதையடுத்து அவர் நடித்த கயல் படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். மேலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், பரியேறும் பெருமாள் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இப்போது கயல் ஆனந்தி முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இராவண கோட்டம் படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதன்படி பேட்டி ஒன்றில் ஆனந்தி கூறியதாவது, என்னுடைய மகனுக்கு சான்றிதழில் சாதிபெயரை குறிப்பிடவில்லை. சாதி இல்லா சான்றிதழ் தான் பெற்று இருக்கிறேன். காரணம் இதுக்கு முன்னாடி அனைவரும் சாதி பெயரை சுமந்துட்டு இருந்தார்கள். ஆனால் என் மகனுக்கு அது தொடர விரும்பவில்லை. இம்முடிவு நான் படித்த புத்தகங்களும், நபர்களுடனான உரையாடல் வாயிலாக எனக்கு தோன்றியது என அவர் தெரிவித்துள்ளார்.