
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984 தேர்தல்ல என்னை முதலமைசராக்குங்கள்… நான் எம்ஜிஆர் கிட்ட முதலமைச்சர் பொறுப்பை கொடுக்கின்றேன் என சொல்லி பார்த்தாரு. எம்ஜிஆர் உயிரோடு இருக்காங்கனே தெரியாது. நாங்க எல்லாம் கேசட்டை போட்டு தான் புரட்சித்தலைவர் உயிரோடு இருக்காங்க என மக்களுக்கு காட்டினோம்.
இந்த மாதிரி டிவி எல்லாம் கிடையாது. நாளைக்கு செல்லூர் ராஜீ பேசின யூட்யூப், டிவி என வரும். இதெல்லாம் நான் என்ன குறைவிட்டேனோ, அதை மட்டும் மீம்ஸ் போடுறாங்க. இப்படி எல்லாம் அன்னைக்கு கிடையாது. ஊடக பெருமக்கள் இங்க நல்லவங்க மாதிரி இருப்பாங்க.யாத்தா…! இவுங்கள பார்த்தா பயமா இருக்குப்பா… ஊடக பெருமக்களை பார்த்தாலே பயமாக இருக்கு. ஒவ்வொருத்தரும் இல்லாத பொள்ளத்தை சொல்லுறாங்க..
டேய்..! 41 ஆண்டுகள் சொக்க தங்கமாக இருந்தவன் இந்த செல்லூர் ராஜு. மதுரைக்காரன், ரோசக்காரன். ஒரு தவறு செய்ய மாட்டான். இந்த செல்லூர் ராஜு தப்பு பண்ணா… என்னோட மட்டுமல்ல…. என் குடும்பம் மட்டுமல்ல… என் சமுதாயமட்டும் அல்ல.. மதுரை மக்களுக்கே கேவலமென்று நினைத்தவன் நான்.
எவனோ ஒருத்தன் சொன்னான்னு… அதை போய் போட்டு… அதையும் ரெண்டு கோடி பேர் பார்த்தாங்க. நம் மக்களினுடைய உணர்வு எப்படி இருக்கு பாருங்க ? என்னை இன்னும் தெர்மாகோல் என சொல்லி ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டுறாங்க… ஓட்டிகிட்டே இருக்காங்கப்பா… என்னைக்கு தான் முடியும்னு தெரிலையே என குமுறினார்.