
L&T நிறுவன தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன் சமீபத்தில் வேலை நேரம் குறித்தான கருத்தை கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் L&T நிறுவன ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன் என்றும், அந்த கிழமைகளில் ஊழியர்களை வேலை செய்ய வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்து வருகின்றேன் என்று கூறினார். மேலும் வீட்டில் அமர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்.? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்க்க முடியும் அதற்கு பதிலாக அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யலாம். என்னுடைய சீன நண்பர் ஒருவர் பேசிய போது, சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும் என்றும், சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றும், அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றார்கள் என்று கூறினார். இதிலிருந்து உலகத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என தெரிகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்திற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள நபர்கள் இது போன்று பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டிருந்தார். அதோடு மெண்டல் ஹெல்த் மாஸ்டர் என்ற ஹேஷ்டாக்கை தீபிகா பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் L&T நிறுவனம் அனைவரது உழைப்பால் அர்ப்பணிப்பால் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. மேலும் அசாத்திய வளர்ச்சிகளை அடைய வேண்டுமெனில் அசாத்திய முயற்சியும் முக்கியம். எங்களது நிறுவனத் தலைவரும் அதை மையமாக வைத்து வேலை நேரம் பற்றி பேசியிருந்தார் அதோடு அவரது கருத்து பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இவர்களின் இந்த அறிக்கைக்கு தீபிகா இவர்கள் மேலும் இதை மோசமாக்கியுள்ளனர் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.