
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை அபிநயா தனது வீட்டின் குளியல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட செல்வராஜ் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார்.
இது குறித்து உடுமலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவியின் உடலை பார்க்க வந்த செல்வராஜ் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின்மோட்டார் அறையில் செல்வராஜூம் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், குழந்தைகளை நிற்கதியாக விட்டு ஒரே நாளில் கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.