தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வேட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.