ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களை அனுப்பி வைத்தனர்.