புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி குமாரமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதலர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.