புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி வீட்டில் விட்டு வெளியேறி கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மணமக்களை அனுப்பி வைத்தனர்.