சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் குமார் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.