தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் தளபதி நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் கடும் குளிரிலும் ஜம்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது.

அதன்பின் விஜய் இனி அனைத்து படப்பிடிப்பையும் சென்னையிலேயே எடுத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தார். அதன்படி சென்னையில் சூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது. எனினும் ரசிகர்கள் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகை தந்து தொந்தரவு கொடுத்து வருவதால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் லோகேஷ் இது சரிப்பட்டு வராது என விஜய்யிடம் பேசி சூட்டிங்கை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளார். ஆகவே லியோ படக்குழு விரைவில் ஹைதராபாத் புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.