இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கிடையே தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. தொடர் தாக்குதலுக்கு மத்தியில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இருவருக்கும் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வரும் நிலையில்,

அமெரிக்க அதிபர் ஜோப் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்று அவர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே ஆயுத உதவிகள் செய்து வரும் அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்று அறிவித்திருக்கிறது. இஸ்ரேல் மக்களுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.