திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.

தமிழக காவல்துறையின் சீரிய முயற்சியால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதால் தான் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் வளர்ந்து வருகிறது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் சமீபத்தில் விஏஓ படுகொலை செய்யப்பட்டது, அதிகரிக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்களால் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசை விமர்சித்து வரும் நிலையில் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக அமைச்சர் எ.வ‌.வேலு கூறியதற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.