பெரு நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்குள் செல்லும் பாலங்களும் பாசன கால்வாய்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நிலச்சரிவு ஏற்படும் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வேன் நிலச்சரிவில் சிக்கி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலசரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.