
தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதே சமயம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம் பேரணி உண்ணாவிரதம் என ஜூனியர் மருத்துவர்கள் போராடினர்.
இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு சிபிஐ வழக்கை விசாரித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் சஞ்சய ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது. இதற்கு இடையே இந்த தீர்ப்பு குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் முதல் நாளிலிருந்து கூறி வருகின்றோம். இப்போதும் அதையே சொல்கிறோம். வழக்கு எங்கள் கையில் இருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே இதில் தூக்கி தண்டனைக்கு உத்தரவிட்டிருப்போம். ஆனால் அந்த வழக்கு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம் எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த தீர்ப்பு குற்றவாளிக்கு பொருத்தமானது என கூறிய அவர் ஆயுள் தண்டனையை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது என்றும் கூறியுள்ளார்.