சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கதிர்வேடு ஜங்ஷனை கடக்க முயன்ற போது செங்குன்றம் நோக்கி வந்த டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.