தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இறந்துள்ளார். இந்த தம்பதியினர் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலையில் பழக்கடையுடன் கரும்புச்சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா கரும்புச்சாறு பிழிந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அனிதா அணிந்திருந்த துப்பட்டா எந்திரத்தில் சிக்கி கழுத்தை இறுக்கியது. இதனால் மயங்கி விழுந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.