பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன் பேரையூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கலைச்செல்வி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற கலைச்செல்வி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.