மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோபியா(33) கடந்த 19-ஆம் தேதி தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் திருமால்நத்தம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென மொபட்டை காலால் மிதித்து தள்ளினார். இதனால் நிலைதடுமாறி சோபியா கீழே விழுந்துவிட்டார்.

இதனையடுத்து மர்ம நபர்கள் சோபியா அணிந்திருந்த 25 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சோபியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க சங்கிலியை பறித்த விஜய், அய்யனார், பாண்டி, அர்ஜுனன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.