ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோருடன் சென்ற போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வீட்டில் ஏராளமான அளவில் பசுவின் தோள்கள், வெட்டப்பட்ட பசுவின் உடல், வெட்டுவதற்காக கட்டப்பட்ட பசுக்கள், பசுவின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயுடன் கூடிய டிண்டல் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசார் உடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்த கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விலங்குகளின் உடல் பாகங்களில் இருந்து பிழியப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயை சிறிய உணவகங்கள் மற்றும் உள்ளூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சப்ளை செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கலப்பட எண்ணை கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.