கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் கோலார் நகர தொகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தராஜின் வேட்புமனுவில் பல்வேறு தவறுகள் இருந்ததாலும், நெடுஞ்செழியனின் வேட்புமனுவில் ஒரு இடத்தில் கையெழுத்து போட தவறியதாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.