சிம்பு நடிப்பில் வரும் 30ம் தேதி வெளியாக இருக்கும் படம் “பத்து தல”. இதையடுத்து சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் தான் STR-48. கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். இவர் டைரக்டில் இதற்கு முன் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை முடித்தபின் ரஜினி வைத்துதான் இயக்குவதாக இருந்தார் தேசிங் பெரியசாமி.

எனினும் அந்த கூட்டணி கைக்கூடவில்லை. இதன் காரணமாக ரஜினிக்கு எழுதிய கதையை சில விஷயங்களை மட்டும் மாற்றி சிம்புவுக்காக தயார் செய்திருக்கிறாராம். ஏற்கனவே இந்த படத்திற்காக சிம்பு தன் சம்பளத்தை குறைத்துள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில் ரூபாய்.40 கோடி கேட்ட சிம்பு, ரஜினிக்காக எழுதிய கதைக்களம் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பு என்பதால் ரூபாய்.30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தெரியவந்திருக்கிறது.