நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் “பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பத்து தல திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் கிருஷ்ணா, நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த படம் வரும் மார்ச்-30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய ஏ.ஆர்.ரகுமான், பத்து தல படத்துக்கு இசையமைக்க ஒப்புகொண்டதற்கு காரணமே சிம்பு தான்.

என் இசை பயணத்தில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று முன்பே வா பாடல். அந்த பாடலுக்குரிய ட்யூன் கொடுக்கும் போது இது ரொம்ப சோகமாக இருக்கு என்று நான் கூறினேன். அதற்கு இல்லை இந்த பாட்டு பயங்கரமாக ஹிட் ஆகும் என்று கிருஷ்ணா கூறினார். அதேபோல் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது முன்பே வா பாடல். இந்த நம்ம சத்தம் பாட்டை சிம்புதான் பாடுவதாக இருந்தது. எனினும் அவர் ஊரில் இல்லை, தாய்லாந்தில் இருந்தார். அப்புறம் நான் பாட வேண்டியதாக போய்விட்டது” என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியிருந்தார்.