சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் திருமண சடங்குகளுக்காக மேடை அலங்கரிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. இதையடுத்து மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். சிறிது நேரத்திற்கு பின் இனிப்பு, பழங்களை உண்ணும் சடங்கு துவங்குகிறது. இதனால் மாப்பிள்ளை வாழைப் பழத்தை மணமகளுக்கு ஊட்டத் துவங்குகிறார்.

எனினும் மணமகள் அதை வாங்கிக்கொள்ள மறுக்கிறார். இருந்தாலும் மாப்பிள்ளை கட்டாயப்படுத்தி அவருக்கு வாழைப் பழத்தை ஊட்டத்தொடங்குகிறார். இதன் காரணமாக இருவருக்கும் சண்டை தொடங்குகிறது. அப்போது ஆத்திரமடைந்த மணமகள் மாப்பிள்ளையை அடிக்கத் தொடங்குகிறார். அதேபோல் அவரும் மணமகளை அடிக்கிறார். அதனை தொடர்ந்து மணமகன் மேடையை விட்டு இறங்கி விடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by king_kushwaha (@kushwaha_vishal9)