ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்  Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 1972ல் அன்றைக்கு தீய மு. கருணாநிதி புரட்சித்தலைவரை  வெளியேற்றியது போல் இந்த எடப்பாடி எனும் சதிக்காரனை விட்டு ஐயா வெளியே வந்திருக்கிறார்.அன்றைக்கு தலைவருக்கே பொதுக்குழு உறுப்பினர் இல்ல, எம்எல்ஏ இல்ல,  எம் பி இல்ல,  எந்த ஆதரவும் இல்ல. ஆனால் ஒரே ஒரு தொண்டர்களை நம்பி தான் நம் புரட்சித் தலைவர் வெளியே வந்தார்.  அதே மாதிரி தான் எங்க ஐயா வெளியே வந்திருக்காரு.

தலைவர் எப்படி ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தாரோ, அதே மாதிரி வருகின்ற நாடாளுமன்றமா இருக்கட்டும்… சட்டமன்றமாக இருக்கட்டும்…. ஓட்டர்ஸ் இல்லாம எந்த பேச்சு வார்த்தையும் நடக்காது…  தலைவர் சட்டத்தையே எடப்பாடி மாற்றுவதற்கு உங்க அப்பன் வீட்டு சொத்தா ? எங்கள் அண்ணா திமுக சொத்து தொண்டர்கள். எப்பேர்ப்பட்ட உச்சக் கட்ட பதவிக்கு வந்தாலும், அது அடிப்படை தொண்டர்களால் தான் முடியும். அந்த தொண்டர்கள் எல்லாம் இப்போ ஐயா பக்கம் இருக்கின்றோம்.

உன்கிட்ட இருக்கிற 2,400 பேர் பொதுக்குழுவினரை வைத்துக்கொண்டு இங்கே என்ன சீன் போடுறியா ? ஏய் எடப்பாடி… உனக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்… ஒன்றை மட்டும் சொல்கிறேன்….  2,400 பேரை வைத்துக்கொண்டு உங்களுக்கு இந்த கொழுப்பு என்றால்,   நாங்க ஒன்றை கோடி தொண்டர்கள்,  87 மாவட்ட செயலாளர், ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஆயிரம் பேரு…. 87,000 பேர் போட்டு இருக்கிறோம்…. 

எங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும். நீ என்ன புரட்சித்தமிழனா ? ஏய் தமிழை ஒழுங்கா பேசி தொல்லையா ? உன்ன தலைவரா ஏத்துக்குறோம்….  தமிழே பேச தெரியாது,  புரட்சி தமிழன்….. யார சொல்ற ? ஒழுங்கா ஓடிப் போயி கொங்கு மண்டலத்தில் போய் எடப்பாடி முன்னேற்ற கழகம் என்று கட்சி ஆரம்பிச்சுக்க என தெரிவித்தார்.