தெற்கு டெல்லியிலுள்ள நசாப்கார்க்கில் வசித்து வரும் சச்சின் கெலாட் என்பவர் உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையில் சச்சின் கெலாட் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கோபமடைந்த அப்பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார்.

அதே நேரம் சச்சின் கெலாட் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக திட்டமிட்டு இருந்தார். இதனை அறிந்த பெண் தன்னை திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று அவரை வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் சச்சின் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலியை கொலை செய்ததோடு உடலை தாபாவின் ஃபிரீசரில் வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த சச்சின் கெலாட்டையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாகவே தலைநகர் டெல்லியில் காதல் விவகாரத்தில் கொடூர முறையில் கொலைகள் நிகழ்ந்து வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.