பா.ஜ.க-வின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்வாரி லால் டோஹ்ரே உடல்நலக் குறைவால் தேசிய தலைநகரிலுள்ள மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு மனைவி, நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

பன்வாரி லால் கன்னோஜ் சதார் தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின் எம்எல்ஏவாக 3 முறை இருந்தார். இவரின் மறைவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். பன்வாரி லாலின் உடல் இன்று மாலை கங்கை நதிக் கரையில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.