தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் தானும் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைகின்றனர். பிற மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு போகும்போது நானும் மாணவர்களுடன் தான் காலை உணவு எடுத்துக் கொள்கிறேன். ஆகவே காலை உணவு திட்டத்தில் அதிகம் பயன்பெறுவதில் நானும் ஒருவன் என்று அவர் கூறினார்.