துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதால் நிலநடுக்கத்தினால் பெருமளவு சேதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5600-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில் இடிபாடுகளில் சுற்றியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது