நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் கொரோனா நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.