தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.